ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
உலக அளவில் டுவிட்டரில் செல்வாக்குள்ள நபர்களில் இந்தியாவைச் சேர்ந்த இரு பிரபலங்களின் பெயர் இடம் பெற்றுள்ளது. இது இந்தியர்களுக்கு கிடைத்த கவுரவம் என கூறப்படுகிறது.
சமூக ஊடக ஆய்வு நிறுவனமான ப்ராண்ட் வாச் நிறுவனம் சமீபத்தில் உலக அளவில், டுவிட்டரில், 2018ம் ஆண்டுக்கான செல்வாக்கு மிக்க நபர்கள் யார் என்பதை அறிவதற்கான ஆய்வை நடத்தியது. ஆய்வுக்குப் பின், செல்வாக்கு மிகுந்த 10 ஆண்கள் மற்றும் 10 பெண்களை வரிசைப்படுத்தி பட்டியல் வெளியிட்டுள்ளது.
இதில் இங்கிலாந்தைச் செர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதல் இடத்தையும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளனர். எட்டாவது இடத்தை, இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடிகர் அமிதாபச்சனும், பத்தாவது இடத்தை இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பெற்றுள்ளனர்.
இந்தத் தகவல் குறித்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஏ.ஆர்.ரகுமான், 'இந்த ஆய்வு முடிவு என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது' என குறிப்பிட்டுள்ளார்.