டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இயக்குநர் ஷங்கர் இயக்கத்திலும், நடிகர் ரஜினி நடிப்பிலும் உருவாகி இருக்கும் '2.0' படம் ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதில், நடிகர் ரஜினி மற்றும் படத் தயாரிப்புக் குழுவினர் பெரும் சந்தோஷத்தில் உள்ளனர். இது குறித்து, படத் தயாரிப்புக் குழு தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
நடிகர் ரஜினிதான் இந்தியாவிலேயே பிசினஸ் வேல்யு உள்ள நடிகர் என்பது மீண்டும் '2.0' படம் மூலம் நிரூபிக்கப்பட்டு விட்டது. இந்தப்படம் ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவழிக்கப்பட்டு தயார் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் வெளியானதும், போட்ட பணத்தை தயாரிப்பு குழுவால் எடுக்க முடியுமா என பலரும் சந்தேகம் கிளப்பினர். ஆனால், படம், சென்னையில் மட்டும் முதல் நாளிலேயே 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததோடு, உலகம் முழுவதிலும் இருந்து வசூலான தொகை நூறு கோடி ரூபாயைத் தாண்டியுள்ளது. படத்தின் மொத்த வசூல் கட்டாயம் ஆயிரம் கோடி ரூபாயைக் தொடும்.
இவ்வாறு அத்தரப்பில் கூறப்பட்டுள்ளது.