பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மகாபாரத கர்ணனை மையப்படுத்தி, மலையாள இயக்குனர் ஆர்.எஸ்.விமல் என்பவர் இயக்கும் படம் 'மஹாவீர் கர்ணா'. விக்ரம் 'கர்ணன்' ஆக நடிக்கும் இந்தப்படம் சுமார் 3௦௦ கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. யுனைடெட் பிலிம் கிங்டம் நியூயார்க் என்கிற நிறுவனம் தயாரிக்கிறது.
ஹிந்தி மற்றும் தென்னிந்திய மொழிகளில் இந்தப்படம் வெளியாக இருந்தாலும், முதலில் ஹிந்தியில் தான் இதன் படப்பிடிப்பை நடத்துகின்றனர். பின்னர், 32 மொழிகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருக்கிறதாம்.
கடந்த ஏப்ரல் மாதம் இயக்குனர் ஆர்.எஸ்.விமல், படத்தின் கதையை சபரிமலைக்கு சென்று வழிபட்டு வந்தார். இந்தநிலையில் திருவனந்தபுரம் பத்மநாபா கோவிலுக்கு சிறப்பு பூஜைக்காக சென்றனர் மகாவீர் கர்ணா படக்குழுவினர். அங்கே அவர்களிடம் கோவிலில் வைத்து பூஜிக்கப்பட்ட மிகப்பெரிய மணி ஒன்று வழங்கப்பட்டது.
இந்த மணி, படத்தில் விக்ரம் வசம் இருக்கும் 3௦ அடி தேரில் ஒரு அங்கமாக இடம்பெற உள்ளதாம். இந்த பூஜையில் நடிகரும் ராஜ்யசபா எம்.பி.யுமான சுரேஷ்கோபியும் நட்புரீதியாக கலந்துகொண்டு மணியை பெற்றுக்கொண்டார். வரும் ஜனவரியில் படப்பிடிப்பு துவங்க உள்ளது.