டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
உலகின் மிகப்பெரிய தியேட்டர்களில் ஒன்றான கிராண்ட் ரெக்ஸ், பிரான்ஸ் தலைநகரான பாரிஸில் உள்ளது. ஹாலிவுட் படங்கள் திரையிடப்பட்டு வந்த இந்த தியேட்டரில் சமீபகாலமாக தமிழ் படங்களும் திரையிடப்பட்டு வருகின்றன. இதை துவக்கி வைத்தது ரஜினியின் கபாலி படம் தான். அதையடுத்து மெர்சல் அங்கு திரையிடப்பட்டன.
இதையடுத்து தற்போது இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படமான 2.0வும் இங்கு திரையிடப்பட்டுள்ளது. இதுவரை வெளியான தமிழ் படங்களுக்கு ஓரிரு நாட்கள் மட்டுமே திரையிடும் அனுமதியை கொடுத்த இந்த தியேட்டர் நிர்வாகம், 2.0 படத்திற்கு டிசம்பர் 8ந் தேதி வரை திரையிட அனுமதி வழங்கியிருக்கிறது.
இதன்மூலம் கிராண்ட் ரெக்ஸ் தியேட்டரில் அதிகநாட்கள் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை 2.0 பெற்றுள்ளது.