ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் சில பிரச்சினைகளுக்காக புதிய படங்களை வெளியிடாமல் நிறுத்தி வைத்தது. அந்த ஒன்றரை மாத கால வேலைநிறுத்தத்தால் அதற்கடுத்து வெளியாகும் படங்களின் வெளியீட்டுத் தேதியை முடிவு செய்ய தயாரிப்பாளர் சங்கத்தில் ஒரு வெளியீட்டுக் குழு நியமிக்கப்பட்டது. அந்தக் குழுவின் ஆலோசனைப்படி புதிய படங்களை வெளியிட்டு வந்தார்கள். ஆனால், 'காலா' படத்தை தாங்கள் நினைத்த நாளில்தான் வெளியிடுவோம் என தனுஷ் தரப்பில் பிடிவாதமாக இருந்தார்கள். அப்போதிலிருந்தே தயாரிப்பாளர் சங்கத்திற்கும், தனுஷிற்கும் மோதல் இருந்து வருகிறது.
தனுஷ் தற்போது நடித்து முடித்துள்ள 'மாரி 2' படத்தை டிசம்பர் 21ம் தேதி வெளியிடப் போவதாக இன்று அறிவித்துள்ளார். ஆனால், அன்றைய தினம் தயாரிப்பாளர் சங்க வெளியீட்டுக் குழு முடிவின்படி “அடங்க மறு, பூமராங், சிலுக்குவார்பட்டி சிங்கம்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன. இப்போது 'மாரி 2' படம் வந்தால் மற்ற படங்களுக்கு சிக்கல் வரும். எனவே, இது பற்றி முடிவெடுக்க தயாரிப்பாளர் சங்கம், வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகிய மூன்று சங்கங்கள் ஒன்று கூடி முடிவெடுக்க உள்ளார்கள். மேலும், சில முக்கிய முடிவுகள் இந்தக் கூட்டத்தில் எடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.
விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவரான பின் வினியோகஸ்தர்கள் சங்கம், தியேட்டர் உரிமையாளர்கள் சங்கம் ஆகியோர் ஒன்றாக கூட்டம் நடத்தப் போவது இதுவே முதல் முறை. எதிரெதிராக செயல்பட்டவர்களை சேர்த்து வைத்துள்ள பெருமை தனுஷையே சாரும். தனுஷ் அறிவித்தபடி 'மாரி 2' டிசம்பர் 21 வெளியாகுமா என்பது இந்தக் கூட்டம் முடிந்த பிறகுதான் தெரிய வரும்.