ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தமிழ் சினிமாவைச் சேர்ந்த நடிகர்கள், நடிகைகள் முன்பெல்லாம் சென்னையில் உள்ள வடபழனி, சாலிகிராமம், தியாகராய நகர், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம் ஆகிய பகுதிகளில்தான் அதிகம் வசித்து வந்தார்கள். அந்தப் பகுதிகள் எல்லாம் தற்போது தினமும் டிராபிக் ஜாம் ஆகும் அளவிற்கு பரபரப்பான இடங்களாகிவிட்டன. அதனால், பல நடிகர்கள் அந்த இடங்களைவிட்டு சென்னையின் கிழக்குக் கடற்கரை சாலை பக்கம் செட்டிலாகி வருகின்றனர்.
விஜய் சில வருடங்களுக்கு முன்பே சாலிகிராமத்தை விட்டு, அடையாறு பக்கம் குடிபெயர்ந்தார். பின்னர், நீலாங்கரை பகுதியில் கடலை ஒட்டி பிரம்மாண்டமான பங்களா ஒன்றைக் கட்டிக் கொண்டு செட்டிலானார்.
சரத்குமார் கடந்த பல வருடங்களாகவே கொட்டிவாக்கம் பகுதியில்தான் வசித்து வருகிறார். கமல்ஹாசன் சில வருடங்களுக்கு முன்பு ஆழ்வார்பேட்டை பகுதியிலிருந்து நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு குடி பெயர்ந்தார். ரஜினிகாந்த் பல வருடங்களுக்கு முன்பே கேளம்பாக்கம் பகுதியில் ஒரு பண்ணை வீட்டை வாங்கி, அங்கு அடிக்கடி ஓய்வெடுக்கச் செல்வார். பார்த்திபன், பாண்டிச்சேரி செல்லும் வழியில் மரக்காணம் பகுதியில் பண்ணை வீடு ஒன்று வாங்கி அங்கு சென்றுவிட்டார்.
அவர்களது வரிசையில் இப்போது அஜித்குமார், திருவான்மியூரிலிருந்து விரைவில் கிழக்கு கடற்கரைசாலையில் கட்டி உள்ள பிரம்மாண்ட பங்களாவிற்கு குடிபெயர உள்ளாராம். அந்த வீட்டில் தியேட்டர், டப்பிங் ஸ்டுடியோ உள்ளிட்ட பல வசதிகள் செய்யப்பட்டுள்ளனவாம். அந்த வீட்டின் வடிவமைப்பையே அஜித் தான் உருவாக்கியுள்ளாராம். சென்னையின் இதயப் பகுதியிலிருந்து இவர்கள் விலகிச் சென்றாலும் ரசிகர்களின் மனதில் ஒரு நிரந்தர இடத்தை தங்களுக்கென உருவாக்கிவிட்டார்கள்.