டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
இந்திய 2 படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன், முழுநேர அரசியலில் ஈடுபட போகிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் அரசியலில் களம் இறங்குகின்றனர். கமல், மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி தொடங்கிவிட்டார். தொடர்ந்து மக்களோடு மக்களாக பயணித்து வருகிறார். ரஜினியோ இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை, முதற்கட்டமாக தனது மன்றத்தை ஒருங்கிணைத்து, நிர்வாகிகளை நியமித்து வலுப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவென்டி-20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்கவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது. இந்தப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன். கேரள மற்றும் ஒடிசா முதல்வர்களை சந்தித்தேன். அவர்களின் யோசனைகள், திட்டங்களை தமிழ்நாட்டிலும் பிரதிபலிப்பேன் என்றார்.