'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு |
இந்திய 2 படத்திற்கு பிறகு நடிக்க மாட்டேன், முழுநேர அரசியலில் ஈடுபட போகிறேன் என நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களாக இருப்பவர்கள் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன். இருவரும் அரசியலில் களம் இறங்குகின்றனர். கமல், மக்கள் நீதி மையம் என்ற பெயரில் கட்சி தொடங்கிவிட்டார். தொடர்ந்து மக்களோடு மக்களாக பயணித்து வருகிறார். ரஜினியோ இன்னும் கட்சி பெயரை அறிவிக்கவில்லை, முதற்கட்டமாக தனது மன்றத்தை ஒருங்கிணைத்து, நிர்வாகிகளை நியமித்து வலுப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில், கேரளாவில் கீழகம்பளம் பஞ்சாயத்தில் டுவென்டி-20 திட்டத்தின் கீழ் வீடுகளை இழந்தவர்களுக்கு முதற்கட்டமாக 37 வீடுகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் துவக்கவிழாவில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், 2019ம் ஆண்டு பார்லிமென்ட் தேர்தலில் மக்கள் நீதி மையம் போட்டியிடும். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ம் தேதி துவங்குகிறது. இந்தப்படத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்கமாட்டேன். கேரள மற்றும் ஒடிசா முதல்வர்களை சந்தித்தேன். அவர்களின் யோசனைகள், திட்டங்களை தமிழ்நாட்டிலும் பிரதிபலிப்பேன் என்றார்.