இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் ராதாரவி தன்னுடைய பெயருக்கு முன் டத்தோ என போட்டுக் கொள்கிறார். அப்படியொரு பட்டத்தை அவருக்குக் கொடுக்கவே இல்லை என, சம்பந்தப்பட்டவர்கள் எனக்கு கடிதம் மூலமாக கூறியுள்ளனர் என, பாடகி சின்மயி, நடிகர் ராதாரவியை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இதற்கு பதில் அளித்து, நடிகர் ராதாரவி கூறியிருப்பதாவது : சின்மயி எல்லா விஷங்களிலும் பொய் பேசக் கூடியவர் என்பதை தொடர்ந்து நிரூபித்து வருகிறார். அது, அவருக்கு வாடிக்கையாகி விட்டது. கவிஞர் வைரமுத்துவை பிளாக் மெயில் செய்யும் நோக்கோடு, அவர் மீது பொய்யான புகாரை கூறினார். அடுத்ததாக என்னிடம் வந்திருக்கிறார். என்னிடம் கொடுப்பதற்கு எதுவுமே இல்லை; உண்மை மட்டும்தான் இருக்கிறது. அதனால், அவரை சும்மா விட மாட்டேன்.
மலேசியாவில் டத்தோ பட்டத்தை யார் வழங்குகின்றனர் என்ற விவரம் கூட அவருக்குத் தெரியவில்லை. நான் பட்டம் பெற்றதற்கான எல்லா ஆதாரங்களும் என்னிடம் இருக்கின்றன. தற்போது நான் வெளியூரில் இருக்கிறேன். சென்னை திரும்பியதும், அதற்கான ஆதாரங்களை வெளியிட இருக்கிறேன். எனக்கு யார் பட்டம் தந்தனரோ, அவர்களே, சின்மயி மீது சட்டப்பூர்மான நடவடிக்கையில் இறங்குவர். சின்மயியின் பித்தலாட்டத்தை, வெளிச்சம் போட்டுக் காண்பிப்பேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.