ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
செல்வராகவன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், சூர்யா, ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கும் படம் 'என்ஜிகே'. இப்படம் தீபாவளிக்கே வெளிவரும் என்று சூர்யா ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்தார்கள். ஆனால், செல்வராகவனுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் படத்தை திட்டமிட்டபடி முடிக்க முடியவில்லை.
இருந்தாலும் படம் பொங்கலுக்காவது வந்து விடாதா என சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் இருந்தார்கள். ஆனால், படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு மாத காலம் நடந்தால் படப்பிடிப்பு முடிவடையும் என்ற நிலை இருந்தது. இன்று இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு இடைவெளிக்குப் பிறகு மீண்டும் ஆரம்பமாக உள்ளது. இந்த மாத இறுதிக்குள் படத்தை முடித்துவிட திட்டமிட்டுள்ளார்கள்.
பொங்கல் சமயத்தில் ஏற்கெனவே பலத்த போட்டி இருக்கிறது. குடியரசு தினத்தில் கார்த்தி நடிக்கும் 'தேவ்' படம் வெளிவர இருக்கிறது. அதன்பின் பிப்ரவரி மாதம் முழு ஆண்டுத் தேர்வுகளில் மாணவர்களும், குடுமபத்தினரும் பிசியாகிவிடுவார்கள். அதனால், படத்தை தமிழ்ப் புத்தாண்டுக்கோ, மே தினத்திற்கோ வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம். அதுவரை சூர்யா ரசிகர்கள் 'அப்டேட், அப்டேட்' எனக் கேட்காமல் அமைதியாக இருக்க வாய்ப்பில்லை.