பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஷங்கர் இயக்கத்தில், ரஜினிகாந்த், அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் வெளியாகி உள்ள இந்திய சினிமாவின் பிரம்மாண்ட படம் 2.0. 3டியில் வெளியாகி உள்ள இப்படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. படத்திற்கு இரண்டு விதமான விமர்சனங்கள் எழுந்தபோதும், வசூலை பாதிக்கவில்லை. காரணம் தொழில்நுட்ப ரீதியாக ஹாலிவுட் தரத்திற்கு தமிழர்களாலும் படம் எடுக்க முடியும் என நிரூபித்துள்ளது 2.0.
முதல்நாளே படம், உலகளவில் ரூ.100 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், நான்கு நாளில் ரூ.400 கோடி வசூலித்திருக்கிறது. இதை படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, டுவிட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இப்படம் குழந்தைகளை வெகுவாக கவர்ந்துள்ளதால் குடும்பத்துடன் படத்தை பார்க்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். குறிப்பாக சனி, ஞாயிறுகளில் முக்கால்வாசி திரையரங்குகள், அரங்கம் நிறைந்த காட்சிகளாக திரையிடப்பட்டன. தொடர்ந்து படத்திற்கு இந்தவாரமும் நல்ல வரவேற்பு இருக்கிறது. இதனால், படத்தின் வசூல் இன்னும் சிறப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.