மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' | விடுதலைபுலி இயக்கத்தின் அடுத்தகட்ட தலைவர்கள் பற்றிய படம் | பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி |
பம்பாய், காதலர் தினம், கண்ணோடு காண்பதெல்லாம் போன்ற தமிழ் படங்களிலும், ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்தவர் நடிகை சோனாலி பிந்த்ரே. இவர் தயாரிப்பாளர், கோல்டி பெல்லை கடந்த 2002ம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிப்பதை குறைத்த சோனாலி, கடந்த ஜூலை மாதம், தான் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக அறிவித்தார்.
இதையடுத்து சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் சோனாலி. தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்தியா திரும்பி உள்ளார் சோனாலி.
இதுப்பற்றி சோனாலியின் கணவர் கோல்டி கூறுகையில், சோனாலி பிந்த்ரே உடல்நலம் தேறி வருகிறார். மீண்டும் நோய் தாக்கினால் அதற்கு ஏற்றபடி சிகிச்சை மேற்கொள்ளப்படும். சோனாலி திடமான பெண். அவரை நினைத்து பெருமைப்படுகிறேன். அனைவரின் அன்பு மற்றும் ஆதரவுக்கு நன்றி என்றார்.