தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
லைகாவின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்ஷய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் நவம்பர் 29-ம் தேதி வெளியாகியுள்ள படம் 2.0. இந்தியத் திரையுலகில் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள 2.0 படம், கிராபிக்ஸில் தாமதம் ஏற்பட்டதால் 3 வருடத் தயாரிப்பில் பல சோதனைகளைத் தாண்டி வெளியானது.
2.0 படத்தின் தயாரிப்பு செலவுக்கு முதல் நாள் வசூல் மிகப்பெரிய அளவில் இருந்திருக்க வேண்டும். ஆனால் இதுவரையிலான வசூல் ஏமாற்றத்தையே கொடுத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் முதல்நாள் சுமார் 18 கோடியும், ஆந்திரா, தெலங்கானாவில் சுமார் 18 கோடியும் வசூல் செய்திருக்கிறது. இந்தியில் சுமார் 20.5 கோடி வசூல் செய்திருப்பதாகவும், கர்நாடகாவில் 8 கோடியும், கேரளாவில் 4 கோடியும் வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் கேரளாவில் ரஜினி படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய ஒப்பனிங் இருக்கும். ஆனால் 2.0 படத்துக்கு முக்கியமாக 2டியில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ஓப்பனிங் இல்லை. அதனாலோ என்னவோ 2.0 படத்தின் முதல் நாள் வசூல், விஜய் நடித்த சர்கார் மற்றும் மெர்சல் படங்களைவிடக் குறைவு. மேலும் இவ்வளவு பெரிய படத்தை தொடர் விடுமுறை நாட்களிலோ அல்லது பண்டிகை காலங்களில் வெளியிட்டிருக்கலாம். மேலும் கஜா புயல் பாதிப்பும் நிலவுவதால் முதல்நாள் வசூல் குறைந்ததாக கூறுகிறார்கள்.
இருப்பினும் அதற்கடுத்த, குறிப்பாக சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் ஹவுஸ்புல் காட்சிகளாக 2.0 இருந்தது.