தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். அவ்வப்போது பரபரப்பு கிளப்பி வருகிறவர். தற்போது அவர் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றபோது அறிமுகமான தீபக் என்பவரை திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார். இந்த திருமணம் இந்த மாதம் 30ந் தேதி நடக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் ராக்கி சாவந்த் தனது கன்னித்தன்மை சான்றிதழை வெளியிட்டுள்ளார். 2018ம் ஆண்டு நவம்பர் 28ந் தேதி வரை அவர் கன்னித்தன்மையோடு இருப்பதாக அந்த சான்றிதழ் தெரிவிக்கிறது. இதனை அவர் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருப்பதோடு, வருங்கால கணவர் தீபக்கிற்கும் அனுப்பி வைத்துள்ளார், அவரும் அந்த சான்றிதழை தனது சமூகவலைளத்தளத்தில் வெளியிட்டு "என்னை பெருமைப்படுத்தி விட்டாய் ராக்கி, நீ பரிசுத்தமானவள்" என்று பூரித்திருக்கிறார்.
"கன்னித்தன்மை சான்றிதழை டாக்டர்கள் மட்டுமே வழங்க முடியும். அப்படி வழங்குவதுகூட சட்டவிரோதம். வழக்கு தொடர்பான விஷயங்களுக்கு நீதிமன்ற உத்தரவுப்படியே வழங்க முடியும். ராக்கி வெளியிட்ட சான்றிதழ் அவரே உருவாக்கி வெளியிட்டுள்ளார்" என்று நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்துள்ளனர்.