தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பெப்சி எனப்படும் தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் ஒருமைப்பாடு தின நிகழ்ச்சி, சென்னை இசை கலைஞர்கள் சங்க வளாக அரங்கில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தில் உறுப்பினாராக உள்ள 22 சங்கங்களைச் சேர்ந்த சிறந்த தொழிலாளர்கள், 22 பேருக்கு நிமாய் கோஷ் விருது வழங்கப்பட்டது. பெப்சி அமைப்பை தொடங்கிய நிமாய் கோஷ் நினைவாக இந்த விருது வழங்கப்படுகிறது. விருதுடன் பண முடிப்பும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் ஆர்.கே.செல்வமணி பேசியதாவது : சினிமா சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், சினிமா தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு பேசி தீர்வு காண தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி கழகம் தொடங்க வேண்டும். சினிமாவை அரசு ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும். அப்போதுதான் வங்கி கடன் உள்ளிட்ட வசதிகளை பெற முடியும். நலிந்த சினிமா தொழில்நுட்ப கலைஞர்களுக்கு அரசு வீடுகட்டிக் கொடுக்க வேண்டும். பையனூரில் அமைய இருக்கும் திரைப்பட நகரில் வீடுகட்டும் தொழிலாளர்களுக்கு அரசு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன் வசதி செய்து தர வேண்டும். என்றார்.