ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கே.பாலசந்தரின் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிகரானவர் ரஜினிகாந்த், தற்போது 2.ஓ வரை அவர் 162 படங்களில் நடித்து விட்டார். அடுத்தபடியாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் தனது 163வது படத்திற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ரஜினி அளித்த ஒரு பேட்டியில், நான் எனது வாழ்வாதாரத்திற்காகத்தான் ஆரம்பத்தில் நடிக்கத் தொடங்கினேன். அதன்பின் எனது வாழ்க்கையின் தேவைகளை பூர்த்தி செய்தேன். இப்போது நான் அதை அனுபவித்து வருகிறேன். எல்லாமே நாடகம் என்பது தான் இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் நான் கற்றுக் கொண்ட பாடம்.
மேலும், நடிப்பை பொழுதுபோக்காகத்தான் நினைக்கிறேன். தொழிலாக நினைக்கவில்லை. காரணம், நடிப்பை தொழிலாக நினைத்தால் அது நமக்கு சுமையாகி விடும். அதனால் நடிப்பை எப்போதுமே ஒரு விளையாட்டாக பொழுதுபோக்காக மட்டுமே நான் செய்து வருகிறேன். விளையாட்டாக எதிர்கொள்ளும்போதுதான் எனக்கு தேவையான எனர்ஜி கிடைக்கிறது.
நான் அரசியலுக்கு வர வேண்டும் என்பது இறைவனின் விருப்பம். அரசியல் என்பது மிகப் பெரிய விளையாட்டு. ஆனால் மிகவும் ஆபத்தானது. அதனால் மிக கவனமாக, நிதானமாக விளையாடி வருகிறேன். அரசியலுக்கு வந்த பிறகும் படங்களில் நடிப்பீர்களா என பலரும் கேட்கிறார்கள். நிச்சயம் நடிப்பேன். என் உடலில் தெம்பு இருக்கும் வரை படங்களில் நடிப்பேன் என்று கூறியுள்ளார் ரஜினிகாந்த்.