ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட் மற்றும் ஹாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் தன்னைவிட 10 வயது குறைந்த ஹாலிவுட் பாடகர் நிக் ஜோன்சை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். இவர்கள் திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடத்த முடிவு செய்யப்பட்டது. ஒரு நிஜ அரண்மனையில் மன்னர் காலத்து திருமணம் போன்று தனது திருமணத்தை நடத்த ஆசைப்பட்டார் பிரியங்கா.
இதற்காக ஜோத்பூரில் உள்ள பிரமாண்ட அரண்மனை புக் செய்யப்பட்டது. இதன் 2 நாள் வாடகை 2 கோடி என்கிறார்கள். திருமணத்திற்காக நிக் ஜோன்ஸ் குடும்பத்தினர் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே இந்தியா வந்து விட்டனர். இந்தியாவை சுற்றிப் பார்த்த அவர்கள் நேற்று ஜோத்பூர் அரண்மனை வந்து விட்டனர். நெருங்கிய உறவினர்கள், நண்பர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுத்திருந்தார் பிரியங்கா.
நிக் ஜோன்ஸ் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர். பிரியங்கா இந்து மதத்தைச் சேர்ந்தவர். இதனால் நேற்று கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. மணமக்கள் இருவருக்கு பாதிரியார் திருமணத்தை நடத்தி வைத்தார். இருவரும் மோதிரம் மாற்றி, முத்தமிட்டு திருமணம் செய்து கொண்டனர். பின்னர் மண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இன்று காலை இந்து முறைப்படி திருமணம் நடந்தது.
நேற்று நடந்த திருமண விழாவில் பிரபல தொழில் அதிபர் முகேஷ் அம்பானி குடும்பத்தினருடன் கலந்து கொண்டார், இவர்கள் தவிர சோப்ரா குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். திருமணத்தையட்டி அரண்மணையைச் சுற்றி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. செல்போன்கள், கேமராக்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.