'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகரும், மக்கள் நீதி மையத்தின் தலைவருமான கமல்ஹாசன், தொடர்ந்து இரண்டாவது நாளாக கஜா புயலால் பாதிக்கப்பட்ட ஊர்களை பார்வையிட்டு, அந்த மக்களிடம் குறைகளை கேட்டறிந்தும், நிவாரண பொருட்களை வழங்கியும் வருகிறார்.
அரசு இயந்திரம் இன்னும் வேகமாக செயல்பட வேண்டும், உதவிகளை விரைவுப்படுத்த வேண்டும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமான சோகம் இல்லை, ஒட்டுமொத்த இந்தியாவிற்கான சோகம். அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதத்துடன் அனைவரும் ஒன்று சேர்ந்து மக்களின் துயரினைத் துடைத்திட வேண்டும் என டுவிட்டரில் கூறியிருந்தார்.
ஆனால் தொடர்ந்து கமலைப்பற்றி ஆளும் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் டுவிட்டரில் கமல் பதிவிட்டிருப்பதாவது : "கஜா புயல் கடந்த பூமியை பார்வையிட்ட பின்னும் பெருஞ்சேதம் ஒன்றும் இல்லை என ஊடகங்களில் கொஞ்சம் கூட கூச்சமில்லாமல் அறிவிக்கும் அரசியல்வாதிகளை முதலில் நாம் தேசத்தின் பேரிடராக அடையாளம் காண வேண்டும்" என பதிவிட்டிருக்கிறார்.