பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை |
இந்தியத் திரையுலகத்தின் முதல் மிகப் பெரும் பட்ஜெட் படம் என சொல்லப்பட்ட 2.0 படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. இப்படம் எந்த பண்டிகை நாளிலும், விடுமுறை நாளிலும் வெளிவராமல் சாதாரணமான ஒரு நாளில் வெளிவந்துள்ளது. மேலும், படம் 3டி முறையில் பல தியேட்டர்களில் வெளியிடப்பட்டுள்ளது. அதனால், இந்தப் படத்தை முந்தைய ரஜினி படங்களுடனோ, மற்ற படங்களுடனோ ஒப்பிட்டுப் பார்க்க முடியாது என திரையுலக வசூல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
ஆனாலும், நேற்று தமிழ்நாட்டில் 18 கோடி தான் இப்படம் வசூலித்திருக்கிறது என்கிறார்கள். ஆந்திரா, தெலுங்கானாவில் 18 கோடியும், கேரளாவில் 4 கோடியும், கர்நாடகாவில் 8 கோடியும், வட இந்தியாவில் 20 கோடியும் வசூலித்துள்ளதாக ஒரு கணக்கு சொல்கிறார்கள். ஆக, இந்தியாவில் மட்டும் முதல் நாளில் மொத்தமாக 68 கோடி வரையில் வசூலித்திருக்கலாம். வெளிநாடுகளில் 30 கோடி வசூலித்திருந்தால் 2.0 ஒரே நாளில் 100 கோடி வசூலைத் தாண்டியிருக்க வாய்ப்புள்ளது.
படத்திற்கு இருவிதமான விமர்சனங்கள் வெளிவந்துள்ளன. சிலர் படம் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய கொண்டாட்டமான படம் என்கிறார்கள். சிலர், இது ரஜினிகாந்த் படம் போலவே இல்லை, ஏன் 'எந்திரன்' படம் போல கூட இல்லை என்று சொல்கிறார்கள். ஆனாலும், நாளையும், நாளை மறுதினமும் விடுமுறை நாள் என்பதால் முன்பதிவு நிறைவாக உள்ளது. அதன்பின் திங்கள் கிழமைக்கு மேல் தியேட்டர்களுக்கு மக்கள் வந்தால் படம் வெற்றி, இல்லை என்றால் நஷ்டம் வரவும் வாய்ப்புள்ளது என்பதே சிலரின் கருத்தாக உள்ளது.