இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் உருவான 2.0 படம் நேற்று வெளியானது. இப்படத்தில் அக்ஷய்குமார் பறவையியல் வல்லுனராக பக்ஷிராஜன் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அந்தக் கதாபாத்திரம் கமல்ஹாசனுக்காக உருவாக்கப்பட்ட கதாபாத்திரம் என படத்திற்கு வசனம் எழுதியுள்ளவர்களில் ஒருவரான ஜெயமோகன் கூறியுள்ளார்.
படத்தில் வில்லனுக்கு ஏன் பக்ஷிராஜன் என பெயர் வைத்தீர்கள் என ஒருவர் கேட்டதற்கு அவர் பதிலளித்திருக்கிறார். அதில் தான் அந்தக் கதாபாத்திரம் கமல்ஹாசனை மனதில் வைத்து உருவாக்கப்பட்டடு என கூடுதல் தகவலை சொல்லியிருக்கிறார்.
“பக்ஷிராஜன் என்பது பி.ஏ.கிருஷ்ணன் பெயர் அல்ல, அவர் அப்பாவின் பெயர். நான்குநேரி பக்ஷிராஜ அய்யங்கார் ஒரு கம்பராமாயண - நாலாயிரத் திவ்யப்பிரபந்த அறிஞர், வழக்கறிஞர். கம்பராமாயணம் மர்ரே ராஜம் பதிப்பின் ஆசிரியர்குழுவில் இருந்தவர். ராஜாஜியின் நண்பர்.
பக்ஷிராஜபுரம் என்பது எங்களூரில் இருக்கும் பறக்கையின் சம்ஸ்கிருதப்பெயர். தமிழில் பறவைக்கரசனூர். சுருக்கம் பறக்கை. அங்கே ஜடாயு பெருமாளுக்கு நிகராக வழிபடப்படுகிறார்
அந்தப் பெயர் 'வில்லனு'க்கு வைக்கப்படவில்லை. படத்தில் அவர் வில்லன் அல்ல. அவர் தான் படத்தின் உணர்ச்சிகரமான மையம், படத்தின் ஆன்மா என்னும் கருத்து அவர் வழியாகவே சொல்லப்படுகிறது
அது பறவையியல் நிபுணர் சலிம் அலியின் சாயல் கொண்ட கதாபாத்திரம். சலிம் அலி இன்றிருந்தால், மனிதர்களின் இந்த தொழில்நுட்ப, நுகர்வு வெறியைப் பார்த்தால் சங்கைக் கடித்திருக்கமாட்டாரா என்ற எண்ணத்திலிருந்து உருவானது
அந்தக்கதாபாத்திரம் முதலில் கமல்ஹாசனுக்காக உத்தேசிக்கப்பட்டது, அவருக்காகவே எழுதப்பட்டது. ஆகவேதான் மரபுசார்ந்த பலவிஷயங்கள் அவருக்காக சேர்க்கப்பட்டன.
அது ஏன் பக்ஷிராஜன்? நம் மரபில் பறவையின் இடமென்ன என்று அந்தப்பெயரே சுட்டுகிறது. 'பொன்னுலகாளீரோ புவனமுழுதாளீரோ நன்னயப்புள்ளினங்காள்!” என்ற நம்மாழ்வாரின் வரியே அந்தக் கதாபாத்திரத்தை, பக்ஷிராஜன் என்ற பெயரை உருவாக்கியது
அவருடைய வரியை அடிக்கோடிட்டுத்தான் படம் முடிகிறது. ஆகவே என் பெருமதிப்பிற்குரிய நான்குனேரியின் அறிஞரையும், பறக்கையின் தெய்வத்தையும், நம்மாழ்வாரையும் கௌரவப்படுத்தியதாகவே நினைத்துக் கொள்கிறேன்.
ஏன் ஜடாயு என்ற பொருளில் பக்ஷிராஜன் என்ற பெயர் அளிக்கப்பட்டிருக்கிறது என படம் பார்த்தால், அல்லது அக்ஷய் குமாரின் தோற்றங்களைப் பார்த்தாலே புரியும்,” எனக் கூறியிருக்கிறார்.
அக்ஷய் குமாருக்கு பதில் கமல்ஹாசன் 2.0 படத்தில் நடித்திருந்தால் அது தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த ஒரு சாதனைப் படமாக இருக்கும். ஆனால், அக்ஷய் குமார் இருப்பதால் ஹிந்தி மார்க்கெட்டில் கிடைக்கும் வசூல் கிடைக்காமல் போயிருக்கவும் வாய்ப்புண்டு.