இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
தமிழ்த் திரையுலகத்தில் பெரிய நடிகர்களின் படங்கள் வெளிவரும் போது அதிகாலை காட்சிகள் நடைபெறும். அதோடு அந்தக் காட்சிகள் ரசிகர் மன்றக் காட்சிகளாக நடைபெற்று, டிக்கெட் கட்டணம் ஊருக்குத் தகுந்தபடி 500, 1000 என விற்பதாக சர்ச்சைகள் இருந்து வருகின்றன.
'சர்கார்' படத்திற்கும் அந்த சர்ச்சை எழுந்தது. அதனால், படத்தின் அதிகாலைக் காட்சிகளுக்கு அரசு தரப்பில் கிடுக்கிப்பிடி போடப்பட்டது. எனவே, 8 மணி காட்சிகள் மட்டுமே நடைபெற்றன. நேற்று வெளியான 2.0 படத்திற்கு அதிகாலைக் காட்சிகள் அனுமதிக்கப்பட்டன.
சென்னை தவிர மற்ற ஏரியாக்களில் பெரும்பாலான ஊர்களில் அந்தக் காட்சிகள் நடைபெற்றன. அந்த ரசிகர் மன்றக் காட்சிகளுக்கு அதிக விலைக்கு விற்கப்படக் கூடாது என்று ரஜினிகாந்த் தரப்பிலும் அறிவுறுத்தப்பட்டது. அதையடுத்து பல ரசிகர் மன்றக் காட்சிகளின் டிக்கெட்டுகள் தியேட்டர் கட்டணங்களிலும், சில இடங்களில் 500 ரூபாய்க்கும் மட்டுமே விற்கப்பட்டுள்ளன.
வெளியூர்களிலும் தியேட்டர் கட்டணங்கள் முறைப்படுத்தப்பட்டதால் 2.0 படத்தின் முதல் நாள் வசூல், முந்தைய ரஜினிகாந்த் படங்களைப் போல அதிக வசூலைப் பெறவில்லை என்று சொல்லப்படுகிறது. 2.0 படத்தின் முதல் நாள் தமிழ்நாடு வசூல் 20 கோடிக்கும் குறைவு என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.