ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தெலுங்குத் திரைப்பட இயக்குனரான ராம்கோபால் வர்மா, வேண்டுமென்றே சர்ச்சைகளைக் கிளப்பும் வழக்கமுடையவர். தேவையில்லாமல் எதையாவது பேசுவார். டுவிட்டரில் பதிவிடுவார். தெலுங்கு முன்னணி ஹீரோக்களையே கண்டபடி கமெண்ட் செய்து டுவிட்டரில் கருத்துக்களைச் சொல்லுவார்.
சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில், “2.0 படம் பெரிய இயக்குனர் சின்ன குழந்தைகளுக்காக எடுத்த படம். பைரவ கீதா படம், சிறிய இயக்குனர் பெரியவர்களுக்காக எடுத்த படம்,” எனப் பதிவிட்டு சர்ச்சையை உருவாக்கினார். 'பைரவ கீதா' படம் ராம்கோபால் வர்மாவின் தயாரிப்பு. அப்படத்தை நாளை நவம்பர் 30ம் தேதி வெளியிட திட்டமிட்டிருந்தார்.
இப்போது சென்சார் டெக்னிக்கல் பிரச்சினை காரணமாக படத்தை டிசம்பர் 7ம் தேதி வெளியிடப் போவதாக அறிவித்துள்ளார். ஆனால், உண்மையில் அவருக்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்கவில்லை என்பதுதான் காரணம் என்று டோலிவுட்டில் சொல்கிறார்கள்.
2.0 படத்திற்கு ஆந்திரா, தெலுங்கானாவில் மிகப் பெரும் வரவேற்பு இருக்கிறது. 2.0 படத்தால் தன் படத்தை தள்ளி வைத்தேன் என்று அவர் சொல்ல முடியாது அல்லவா, அதனால்தான் டெக்னிக்கல் பிரச்சினை என்று சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.