பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
இசை அமைப்பாளர் இளையராஜா ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில், தான் இசை அமைத்த பாடல்களின் காப்புரிமையை, சினிமா இசை கலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துள்ளார். இதுகுறித்து சினிமா இசைக் கலைஞர்கள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
காப்புரிமை என்பது இசை அமைப்பாளர்கள், பாடல் ஆசிரியர்கள், பாடல் வெளியீட்டாளர்கள் ஆகியோருக்கே உரியதாகும். ஆனால் அதனை இசை கலைஞர்களுக்கும் தந்து புரட்சி செய்துள்ளார் இளையராஜா. தன் 1000 படங்களில் இடம்பெற்ற 5600 பாடல்களின் காப்புரிமையை காக்கும் பணியையும், நெறிப்படுத்தும் பணியையும் நமது சங்கத்திற்கு கொடுத்துள்ளார்.
இதன் மூலம் வரும் தொகை சங்க உறுப்பினர்களின் சேமநல நிதிக்குக்கும், கருணைத் தொகைக்கும் பயன்படுத்தப்படும். அதேபோன்று சங்க வளர்ச்சி நிதிக்காக இசை நிகழ்ச்சி நடத்தி தரவும் ஒப்புதல் அளித்துள்ளார். இளையராஜாவுக்கு சங்கம் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.