ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படம் இன்று(நவ., 29) வெளியானது. இந்தப்படம் கன்னடத்திலும் வெளியானது. ஆனால் கன்னடத்தில் 2.ஓ படத்தை திரையிடக்கூடாது என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவருமான வாட்டாள் நாகராஜ் நேற்று போராட்டம் நடத்தினார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ரஜினிக்கு எதிராகவும், 2.0 படத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் நிருபர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ் "கர்நாடகத்தில் பிற மொழி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கன்னட படங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
2.0 படம் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. ஓடிக்கொண்டிருந்த கன்னடப் படங்கள் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் கன்னட சினிமா அழிந்து விடும். இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 2.0 படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்துவோம்" என்றார். இந்தப் போராட்டத்தால் பெங்களூருவில் பெரும்பாலான தியேட்டர்களில் 2.0 திரையிடப்படவில்லை.