வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் |
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா, நடிப்பில் உருவாகி வரும் படம் 'என்.ஜி.கே'. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி இருவரும் கதாநாயகியாக நடித்துள்ளனர்.
இந்தப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்தபோது இயக்குநர் செல்வராகவனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. எனவே கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் நடிக்கப்போனார் சூர்யா.
தற்போது மீண்டும் 'என்.ஜி.கே' படப்பிடிப்பு தொடங்கப்பட உள்ளது. டிசம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பைத் தொடங்க ஆயுத்தமாகி வருகின்றனர். அதுதான் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என்றும், டிசம்பர் மாத இறுதிக்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடித்துவிடுவோம் என்றும் செல்வராகவன் தரப்பில் தயாரிப்பாளருக்கு உறுதி கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் சூர்யா ரசிகர்கள் அவ்வப்போது, என்.ஜி.கே அப்டேட் என்ன என்று சமூக வலைதளத்தில் கேள்வி எழுப்பி வந்தார்கள். அதற்கு சரியான பதில் கிடைக்காததினால் மீம்ஸ்கள் தயார் செய்து வெளியிட்டார்கள். இதெல்லாம் இயக்குநர் செல்வராகவனை கடுப்பேற்றிவிட்டது.
“நாங்கள் அமைதியாக, கடுமையாக உழைத்து வருகிறோம். அப்டேட்டுகள் சரியான நேரத்தில் வரும். மூன்று நாளைக்கு ஒரு முறையோ, வாரா வாரமோ வராது.. எங்களுக்கு நீங்கள் பக்க பலமாக இருந்தால் எங்கள் இலக்கை நோக்கி இன்னும் கடுமையாக உழைக்கும் பலம் எங்களுக்குக் கிடைக்கும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன்” என்று தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.