தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி, அக்சய் குமார், எமி ஜாக்சன் நடிப்பில் பிரம்மாண்டமாய் உருவாகி உள்ள படம் 2.0. ரஹ்மான் இசையமைப்பில், லைகா தயாரிப்பில் ரூ.550 கோடி பட்ஜெட்டில், 3டி தொழில்நுட்பத்தில் தயாராகி உள்ள இப்படம், ஹாலிவுட் தரத்திற்கு, இந்தியாவிலேயே அதிக பட்ஜெட்டில் உருவான படம் என்ற பெருமையோடு இன்று(நவ.,29ம் தேதி) உலகம் முழுக்க ரிலீஸாகி உள்ளது.
வழக்கமாக பெரிய நடிகர்களின் படங்களுக்கு அதிகாலை மற்றும் நள்ளிரவு சிறப்புகாட்சிகள் நடைபெறும். சமீபகாலமாக அது குறைந்துள்ளது. 2.0 படத்திற்கும் ஆரம்பத்தில் சிறப்பு காட்சி அனுமதிக்கபடாத நிலையில், சென்னையில் காசி டாக்கீஸில் அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டன.
தென் சென்னை ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சிறப்பு காட்சியில் மாவட்ட செயலாளர் உட்பட ரசிகர் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டு படத்தை தீபாவளி போல கொண்டாடினர்.
தமிழ்நாட்டின் பெரும்பாலான ஊர்களில் படம் 8 மணிக்கு மேல் துவங்கியது. சில ஊர்களில் அதிகாலை காட்சி திரையிடப்பட்டது. இந்தியாவின் பெருமைமிகு படமாக வௌிவரும் 2.0, தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், ஹந்தி உள்ளிட்ட மொழிகளிலும், உலகமெங்கும் 10 ஆயிரம் தியேட்டர்களில் வௌியாகி உள்ளன.