பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
கொஞ்ச நாட்களுக்கு அமைதியாக இருந்த நடிகை ஸ்ரீ ரெட்டி மீண்டும் அதிரடி செய்யத் துவங்கி இருக்கிறார். தன்னை தமிழ் நடிகர் ஒருவர் பின் தொடர்வதாகவும்; அருவெறுப்பாக நடந்து கொள்வதாகவும் அவர் முகநூலில் பதிவிட்டிருக்கிறார். இதனால், மீண்டும் தமிழ் திரையுலகம் பரபரப்பாகி இருக்கிறது.
இது குறித்து, நடிகை ஸ்ரீ ரெட்டி முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது: திரையுலகைச் சேர்ந்த பலரும் என்னை பொதுக் கழிப்படம் போல பயன்படுத்தினர்; எனக்கு ஏற்பட்ட வலியும்; காயமும் இன்னும் ஆறவில்லை; என்று ஆறுமோ தெரியவில்லை. மனரீதியில் முழுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறேன். எனக்கான காயங்கள் அனைத்துக்கும் நானே காரணம் என்பதையும் அறிகிறேன்.
பட வாய்ப்புக்காக என்னை ஒரு பிணத்தைப் போல பயன்படுத்தினர். எதையும் நான் மனப்பூர்வமாக செய்யவில்லை என்பதை மட்டும் எல்லோரும் ஏற்றுக் கொள்ளுங்கள்; என்னை நம்புங்கள். என்னைச் சுற்றி நடந்தவைகள் அனைத்தும் மோசமானவை. அதில் இருந்து எப்படி மீண்டேன் என்பதே எனக்குத் தெரியவில்லை.
ஆனாலும், அந்த நிம்மதியில் இருந்து நான் மீள முடியாத அளவுக்கு, தமிழ் கதாநாயகன் ஒருவர், எனக்கு சினிமா வாழ்க்கையை அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறார். அவர், தெலுங்கு திரையுலகினருக்கு நெருக்கமானவர்; அவர் பெண் பித்தர். இந்த பூமியில் வாழ எனக்குத் தகுதி இல்லையா?
இவ்வாறு அவர் பதிவிட்டு இருக்கிறார்.