ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
கஜா புயலின் கோரத்தாண்டம் டெல்டா மாவட்டங்களை எந்தளவுக்கு பாதித்திருக்கிறது என தமிழ்நாடே அறியும். ஊருக்கே சோறுப்பட்ட அந்த மக்கள் கையேந்தி நிற்பது பார்ப்பவர்களை கண்கலங்க செய்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசியல்வாதிகளையும் தாண்டி பொது மக்களும், தன்னார்வலர்களும், திரைப்பிரபலங்களும் உதவி வருகின்றனர்.
திரைப்பிரபலங்களை பொருத்தமட்டில் பலர் நிதியுதவி அளித்துள்ளனர். சிலர் ரசிகர்கள் மூலம் உதவி வருகின்றனர். நடிர் தனுஷ், தனது ரசிகர்மன்றம் மூலமாக கடந்த ஒருவாரத்திற்கு மேலாக உதவி வருகிறார். தனுஷ் ரசிகர் மன்றத்தின் தலைவரான சுப்ரமணிய சிவாவின் தலைமையில் ரசிகர்கள் குழுவாக நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டத்திற்கும் உதவி வருகின்றனர்.
இதற்காக தஞ்சாவூர் மாவட்டத்தில் திருமணம் மண்டபம் ஒன்றை வாடகைக்கு எடுத்து நிவாரண பொருட்களை வாங்கி பிரித்து கொடுத்து வருகின்றனர். அரிசி, பருப்பு, உடைகள், காய்கறிகள், போர்வைகள், பாத்திரங்கள் என ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கி வருகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தலா 1500 குடும்பங்களுக்கு உதவும் வகையில் இவர்கள் பணியாற்றி வருகின்றனர். நிவாரண பொருட்களுக்காக தனுஷ், ரூ.30 லட்சம் வழங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதுதவிர தனுஷ் மன்ற ரசிகர்களும், நிர்வாகிகளும் தனித்தனியாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வருகின்றனர்.