பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
ஒவ்வொரு பெண்ணும் குறிப்பாக சமூகத்தில் பிரபலமானவர்கள் கூட தாங்கள் எவ்வாறெல்லாம் பாலியல் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளானோம் என்பதை 'மீ டூ' வாயிலாக வெளிப்படுத்தி வருகிறார்கள். அவர்களின் இந்த துணிச்சல் முயற்சிக்கு வரவேற்பு கிடைத்தாலும் கூட, திரையுலகில் உள்ள சில நடிகைகளே இந்த 'மீ டூ' குற்றச்சாட்டுக்களை சந்தேக கண்ணோட்டத்துடன் தான் பார்க்கின்றனர்.
அதில் நடிகை பிரியாமணியும் ஒருவர். சமீபத்தில் இவர் மீ டூ பற்றி கூறும்போது, பெண்களின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளும்போது இது நல்ல நடைமுறைதான். பெண்கள் தங்கள் மீதான அத்துமீறல்களை வெளிச்சத்துக்கு கொண்டு வர ஒரு அருமையான பிளாட்பார்ம் கிடைத்துள்ளது.
என்றாலும், சிலர் மலிவான விளம்பரத்திற்காக இதை பயன்படுத்துகிறார்களோ என்கிற சந்தேகமும் எழவே செய்கிறது. ஒரு சில விஷயங்கள் அதை உறுதிப்படுத்தவும் செய்கின்றன” என கூறியுள்ளார்.
மேலும் தான் மலையாள நடிகர் சங்கமான 'அம்மா'வில் மட்டுமல்ல, சினிமா பெண்கள் நல அமைப்பிலும் கூட உறுப்பினராக இல்லை என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார்.