நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
தமிழ்த் திரையுலகத்தில் ஏராளமான சூப்பர் ஹிட் பாடல்களைக் கொடுத்தவர் இளையராஜா. அவருடைய இசையாலும், பாடல்களாலும் முன்னுக்கு வந்தவர்கள் எவ்வளவோ பேர். ஆனால், கடந்த சில வருடங்களாக தன்னுடைய பாடல்களைப் பயன்படுத்த இளையராஜா கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தார்.
அவருடைய பாடல்களை மேடைகளில் பாட காப்புரிமை வழங்க வேண்டும் என்றார். இதனால், அவருக்கும் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியத்திற்கும் கூட மோதல் உருவானது. காப்புரிமை பிரச்சினையால் எப்எம் வானொலிகளும் இளையராஜாவின் பாடல்களை ஒலிபரப்புவதை நிறுத்திக் கொண்டன.
இளையராஜா அவருடைய பாடல்களை மேடைக் கலைஞர்கள் பயன்படுத்த எந்தவிதமான கட்டுப்பாட்டையும் விதிக்கவில்லை. அவர்கள் அதை இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்தார்.
தனக்கென தனி இணையதளம், யு டியூப் சேனல் என தன் பாடல்கள் அனைத்தையும் அவற்றில் இடம் பெற வைத்தார் இளையராஜா.
நேற்று இளையராஜா திடீரென ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் அவருடைய பாடலை பயன்படுத்துவதற்கு காப்புரிமை பெற வேண்டும் என்றும், அதை வசூலிக்கும் வேலையை திரையிசைக் கலைஞர்கள் சங்கத்திடம் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிவித்தார்.
இளையராஜா பாடல்களை கச்சேரிகளில் பயன்படுத்த எவ்வளவு கட்டணம் என்பதை திரையிசைக் கலைஞர்கள் சங்கம் வெளியிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
அதன்படி, ஒரு ஆண்டுக்கு, வெளிநாட்டுக் கச்சேரிகளுக்கு ஏ பிரிவினருக்கு 20 லட்சம், பி பிரிவினருக்கு 15 லட்சம், சி பிரிவினருக்கு 10 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாம்.
இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட அறக்கட்டளை நடத்தும் நிகழ்ச்சிகள், கல்யாணம், பிறந்தநாள் மற்ற நிகழ்ச்சிகள், கோயில்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பயன்படுத்திக் கொள்ள கட்டணம் எதுவும் இல்லையாம்.
ஏ, பி, சி ஆகிய பிரிவுகள், சீனியாரிட்டி அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.