ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
தனது பாடல்களை பாடுபவர்கள் என்னிடம் அனுமதி பெற்று, உரிய ராயல்டி தொகையை கொடுத்துவிட்டு தான் பாட வேண்டும் என இசையமைப்பாளர் இளையராஜா மீண்டும் ஒரு முறை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ :
என் பாடல்களை பாடுவதற்கு, இசையமைப்பதற்கு முன்னர் என்னிடம் முன் அனுமதி பெற வேண்டும். அதற்குரிய விஷயங்களை முறைப்படி செய்துவிட்டு பாடுவது தான் சரியாக இருக்கும். இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன். இதுவரை ஐபிஆர்எஸ்ஸில் உறுப்பினராக இருந்தேன். இப்போது இல்லை. என் சார்பாக வசூலித்த ராயல்டி தொகையை இனி, தென்னிந்திய திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்கம் பெறும். அந்த உரிமையை அவர்களுக்கு வழங்கியிருக்கிறேன். இதில் பாடகர்களும் அடங்குவர்.
நீங்கள் பாட, நான் இடையூறு செய்யவில்லை. நீங்கள் வாங்குகின்ற பணத்துக்குத்தான் ராயல்டி தொகையே தவிர பாடுகின்ற பாடலுக்கு ராயல்டி தொகை இல்லை. நீங்கள் இலவசமாகப் பாடினால், பாடலாம். அதற்கு பணம் கொடுக்கதேவையில்லை. கச்சேரி செய்ய பணம் வாங்குகிறீரகள் அல்லவா.? என் பாட்டை தானே பாடுகிறீர்கள், அதற்கு நீங்கள் பணம் வாங்குகிறீர்கள், அதில் எனக்கு பங்கு இல்லையா.? பாட்டே என்னுடையது என்கிறபோது, பங்கு எப்படி இல்லாமல் போகும். பங்கு என்ன ஒரு சிறிய தொகை, பெயருக்கு தான் கேட்கிறேன். சட்டப்படி இருக்க வேண்டும் என்பதற்குத் தான் பங்கு கேட்கிறேன். வரும் தலைமுறைக்கு இது ஒரு பெரிய நடவடிக்கையாக, முன்னோட்டமாக இருக்கும். எல்லோரும் இந்த விஷயத்தைச் சரியாக புரிந்துகொள்ளுங்கள்.
இவ்வாறு இளையராஜா கூறியுள்ளார்.