'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் | மே 17ல் வருகிறார் சத்யபாமா | பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன் | 'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'? | 'விக்ரம், லியோ, கூலி' - டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்? | 10 வருடங்களுக்கு பிறகு ஜூனியர் என்டிஆர் பட இயக்குனர் - ஒளிப்பதிவாளர் பரஸ்பரம் குற்றச்சாட்டு | ஜன கன மன 2 எப்போது? - இயக்குனர் தகவல் | ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு | சிறிய படங்களை நசுக்குகிறதா ரீ-ரிலீஸ் படங்கள்? | சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால் |
2.0 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. அதில் இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய் குமார், தெலுங்கு வினியோகஸ்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்வில் பேசிய இயக்குனர் ஷங்கர், விஎப்எக்ஸ் கம்பெனி ஏமாற்றியதால் தான் படம் தாமதமாக வெளிவருகிறது, பட்ஜெட்டும் அதிகமானது என்று தெரிவித்தார்.
“2.0 படத்தில் நிறைய விஎப்எக்ஸ் காட்சிகள் செய்ய வேண்டி இருந்தது. அதற்காக ஒரு கம்பெனியை நியமித்தோம். அந்த நிறுவனம் அந்த விஎப்எக்ஸ் காட்சிகளை உருவாக்க மிகவும் தாமதப்படுத்தியது. தொடர்ந்து அவர்கள் கூடுதல் காலத்தைக் கேட்டுக் கொண்டே இருந்தார்கள்.
முதலில் திட்டமிட்ட பட வெளியீட்டுத் தேதிக்கு இரண்டு மாதம் முன்பாக வேலையை முடித்துத் தருவதாகக் கூறினார்கள். அதன்பின் ஆறு மாதம் கூடுதல் அவகாசம் கேட்டார்கள். பின்னர் அதுவே ஒரு வருடம் ஆனது. ஆனாலும், அவர்கள் வேலையை முடிக்கவில்லை. நாங்கள் கொடுத்த வேலையை முடிக்கும் திறமை அந்த நிறுவனத்திடம் இல்லை என்பது பின்புதான் தெரிய வந்தது. அதன்பின் வேறு ஒரு பெரிய கம்பெனியை அணுகி அவர்களிடம் வேலையைக் கொடுத்தோம். இதனால்தான் பட வெளியீடு தாமதம் ஆனது, பட்ஜெட்டும் கூடியது,” என்றார் ஷங்கர்.
இந்திய அளவில் இதுவரை வெளிவந்த படங்களில் '2.0' படத்தில் இடம் பெற்றுள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் அதிகம் பேசப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.