தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ரஜினிகாந்த், அக்ஷய் குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிக்கும் 2.0 படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. இயக்குனர் ஷங்கர், ரஜினிகாந்த், அக்ஷய்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அப்போது பேசிய ரஜினி, “எந்திரன் படத்தை விட 2.0 படத்தில் இயக்குனர் ஷங்கரின் நம்பிக்கை அதிகமாக இருந்தது. வெளிநாட்டுக் கலைஞர்களிடம் அவர் வேலை வாங்கிய விதம் மிகத் திறமையானது. 2.0 படப்பிடிப்பின் போது அவர் எந்த அழுத்தத்திலும் இல்லை, ஆனால், போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளின் போது மிகவும் அழுத்தத்துடன் இருந்தார்.
முதலில் விஎப்எக்ஸ் செய்து கொடுத்த கம்பெனியின் வேலை அவருக்குப் பிடிக்கவில்லை. அதன்பின் இப்போது படம் வந்திருக்கும் விதம் அவரை மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறது. உலகத் தரத்திலான விஎப்எக்ஸ காட்சிகள் இந்தப் படத்தில் இருக்கும். அதோடு கனமான கதையும் படத்தில் உண்டு. நிச்சயம் இந்தப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெறும்.
அக்ஷய் குமார் நடித்த கதாபாத்திரத்தில் அவரைத் தவிர வேறு யாராலும் இவ்வளவு சிறப்பாக செய்திருக்க முடியாது. மிகவும் கடினமாக உழைத்துள்ளார். இப்படிப்பட்ட தரமான படம் வருவதற்கு அவர் தான் முக்கியக் காரணம். ஏஆர்.ரஹ்மானும் அற்புதமான இசையைக் கொடுத்துள்ளார்.
1975ம் ஆண்டு என்னுடைய முதல் படம் வந்த போது எப்படி உற்சாகமாக இருந்தேனோ, அது போலவே 2.0 படத்தின் வெளியீட்டிற்காகவும் உற்சாகமாக காத்திருக்கிறேன்,” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.