துபாய் மியூசியத்தில் தனது மெழுகுசிலையுடன் போஸ் கொடுத்த அல்லு அர்ஜுன் | சீரியல் நடிகை அக்ஷிதாவிற்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! | என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் |
உதயநிதி ஸ்டாலினுக்கு இன்று 41வது பிறந்தநாள். வழக்கமாக அவரது ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் பிறந்த நாளை கொண்டாடுவார்கள். இந்த ஆண்டு எனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என்று உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். இதுகுறித்து அவர் சார்பில் ரசிகர் மன்றம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது :
இந்த ஆண்டு தி.மு.க., தலைவர் கருணாநிதி மறைந்திருக்கிறார். கஜா புயலால் டெல்டா பகுதி மக்கள் பெரும் துயரத்தில் இருக்கிறார்கள். இதனால் இந்த ஆண்டு பிறந்தநாளை கொண்டாட்டமாக அமைத்துக் கொள்ள வேண்டாம். அதற்கு பதிலாக புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று உதவி செய்யுங்கள். தமிழகமெங்கும் பன்றிக் காய்சல், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தகுந்த வழியில் உதவுங்கள். அவர்களுக்கு நற்பணி செய்யுங்கள் என்று கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.