‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு |
கஜா புயலுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் எல்லாம் உதவி செய்து கொண்டிருக்க, நடிகர் அஜித் மட்டும் கோவாவுக்கு சென்று விட்டார். அவர், இப்படி ஒதுங்கி இருப்பது ஏன் என்று புரியவில்லை என, சிலர் அங்கலாய்த்தனர்.
ஆனால், அஜித், தன்னுடைய உதவியாளரை அழைத்து, ரூபாய் பதினைந்து லட்ச ரூபாய்க்கு, செக் போட்டுக் கொடுத்து, அதை, முதல்வர் நிவாரண நிதிக்கு சேர்க்குமாறு கூறினார். அதையடுத்து, முதல்வர் நிவாரண நிதிக்கு, அஜித்தின் செக் கொண்டு சேர்க்கப்பட்டது.
அப்போது, இந்த செக்கை, நீங்களே நேரடியாக, முதல்வரை சந்தித்து கொடுத்து விடலாம். அதற்கு நாங்கள் ஏற்பாடு செய்கிறோம் என, அஜித்தின் நண்பர்கள் சிலர் கூறியுள்ளனர்.
அதை மறுத்த அஜித், இந்த விஷயத்திலெல்லாம் விளம்பரம் தேடிக் கொள்ளக் கூடாது. யாருக்கு உதவி சென்று சேர வேண்டுமோ, அது சரியான நேரத்தில் போய்ச் சேர வேண்டும் என்று மட்டும் சொல்லியிருக்கிறார்.