ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடன இயக்குநரும், நடிகையுமான காயத்ரி ரகுராம், குடிபோதையில் காரை ஓட்டி வந்ததால், அவரை தடுத்து நிறுத்திய போலீசார் ரூ.3500 அபாராதம் விதித்தனர். ஆனால் இந்த செய்திரை காயத்ரி ரகுராம் மறுத்துள்ளார்.
இதுதொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியிருப்பதாவது : எதையோ மறைக்க, நான் செய்தியாக்கப்பட்டுள்ளேன். பேனாவும், பத்திரிகையும் பலமாக இருக்கலாம், ஆனால் என் ஆன்மாவையும், வாழ்வையையும் விட எதுவும் பலமானது இல்லை.
என் படப்பிடிப்பை முடித்துவிட்டு வழியில் சக நடிகர்களை வீட்டில் இறக்கிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தேன். வழக்கமான வாகன சோதனைக்காக போலீசார் என்னை நிறுத்தினார்கள். அங்கு வாக்குவாதம் எதுவும் நடக்கவில்லை. எனது லைசன்ஸ் உள்ளிட்ட மற்ற ஆவணங்கள் வேறு பையில் இருந்ததால் அதை போலீசிடம் காண்பிக்க முடியவில்லை. நானே தான் எனது காரை ஓட்டி சென்றேன். போதையில் இருந்தால் எப்படி போலீசார் என்னை காரை ஓட்ட அனுமதிப்பார்கள். என்னைப் பற்றி எந்த செய்தி வந்தாலும் கவலையில்லை என பதிவிட்டுள்ளார்.