ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
நடிகை காயத்ரி ரகுராம் போதையில் கார் ஓட்டி நள்ளிரவில் போலீசிடம் பிடிபட்டார். அவருக்கு 3500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதத்தை கட்டிவிட்டு காரை மீட்டுச் சென்றார் காயத்ரி ரகுராம். சம்பவம் நடந்த அன்று இரவு நடந்தது என்ன என்பது பற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
காயத்ரி ரகுமாம் வீக் எண்ட் பார்ட்டியில் கலந்து கொண்டு விட்டு 11.30 மணிக்கு ஓட்டலில் இருந்து கிளம்பியிருக்கிறார். மது போதையிலேயே காயத்ரி ரகுராம் காரை ஓட்டி வந்தார். காரை நிதானம் இன்றி அங்கும், இங்கும் தத்தளித்தபடி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அவர் மதுபோதையில் இருந்தது தெரிய வந்தது.
போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்து கையெழுத்து வாங்கிவிட்டு. ஒரு போலீஸ்காரை கார் ஓட்டச் சொன்னார்கள். அவர் காயத்ரியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் விட்டு விட்டு காரை காவல் நிலையத்தில் கொண்டு நிறுத்தி விட்டார். மறுநாள் காலை காவல் நிலையத்திற்கு சென்று ரூ.3,500 அபராதத்தை செலுத்தி விட்டு காரை எடுத்துச் சென்றார் காயத்ரி.