'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில தினங்களுக்கு முன் மீ டூ விவகாரம் குறித்து நடிகர் மோகன்லாலிடம் கேட்கப்பட்டபோது, 'அது கூடிய விரைவில் காணாமல் போய்விடும்' என கிண்டலாக பதில் கூறினார். இதற்கு சில நடிகைகள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில் தற்போது மோகன்லாலுடன் ஒடியன் என்கிற படத்தில் நடித்துள்ள நடிகர் பிரகாஷ்ராஜ், இதுபற்றி கூறும்போது, மோகன்லால் விவேகமானவர் தான் என்றாலும் இதுபோன்ற சென்சிட்டிவ்வான விஷயங்களை பற்றி பேசும்போது வார்த்தைகளில் கவனமாக இருக்க வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும் மோகன்லால் எந்த உள்ளர்த்தமும் இல்லாமல் தற்செயலாக இதை பேசியிருப்பார் என்று தான் நினைக்கிறேன் என கூறியுள்ள பிரகாஷ்ராஜ், தான் மீ டூ' பிரசாரத்தை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளார்.