டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
நடிகர் பிரசன்னா தற்போது முன்னணி தொலைக்காட்சியில் சொப்பன சுந்தரி என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் சிவகார்த்திகேயன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பல ஆண்டுகளுக்கு முன்பு சிவகார்த்திகேயன் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சி ஒன்றில் பிரசன்னா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். இந்த இரு நிகழ்ச்சிகளையும் ஒப்பிட்டு இணையதளத்தில் பலர் கிண்டலும், கேலியும் செய்து வருகிறார்கள். மீம்சும் வெளியிட்டிருக்கிறார்கள்.
ஒருவர், தனது டுவிட்டரில், "சிவகார்த்திகேயன் அற்புதமான தொகுப்பாளர். பிரசன்னாவுக்கு தொகுப்பாளராக அவ்வளவு திறமை இல்லை. உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பிரசன்னாவைத் தொகுப்பாளராகப் பார்ப்பது போரடிக்கிறது. அவர் ஒரு சுமாரான நடிகர். அதிகம் வெற்றிகள் பார்க்காதவர். சிவா, தமிழ் சினிமாவின் சிறந்த பொழுதுபோக்குக் கலைஞரில் ஒருவர்” என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து பிரசன்னா கூறியது “அன்புள்ள நண்பருக்கு நான் தொகுத்து வழங்குவது போரடிக்கிறது என்றால், அப்படியே இருக்கட்டும். அதை நான் முழுநேர வேலையாகச் செய்யப் போவதில்லை. நான் சுமாரான நடிகர் என்றால், என்னை மேம்படுத்திக்கொள்ள இடமிருக்கிறது. நான் அதிக வெற்றிகளைப் பார்க்கவில்லை என்றால், வெற்றிபெற இன்னும் அவகாசம் உள்ளது. வெற்றியைச் சம்பாதிக்க ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நேரம் தேவைப்படும். வெறுப்பையும், அன்பையும் சம்பாதிக்க ஒரு நொடி போதும். ஒருநாள் நான் உங்கள் அன்பையும் பெறுவேன்” என கூறியுள்ளார்.
பிரசன்னாவின் இந்த பதில் டிரண்டிங் ஆகியுள்ளதால் நெகிழ்ந்து போயிருக்கிறார் பிரசன்னா.