அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் |
தமிழ் சினிமாவில் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்களின் மூலம் வித்தியாசமான இயக்குனர் என்ற பெயரைப் பெற்றவர் செல்வராகவன்.
அவர் எடுத்து முடித்த நெஞ்சம் மறப்பதில்லை இன்னும் வெளியாகவில்லை. எடுத்துக் கொண்டிருந்த மன்னவன் வந்தானடி அப்படியே நின்றுவிட்டது. இருப்பினும் சூர்யா நாயகனாக நடிக்கும் என்ஜிகே படத்தை இயக்கி வருகிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைய உள்ளது.
இதனிடையே, ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என்பதுதான் தன் தாகம் என செல்வராகவன் கூறியுள்ளார். இது பற்றி டுவிட்டரில் , “வெளியே எங்கு சென்றாலும் நண்பர்கள் புதுப்பேட்டை 2 எப்போது ? என்று அன்பாய் கேட்கின்றனர். நடக்கும் என சொல்வேன். ஆயினும் என் மனதுக்குள் கேட்கும் தீரா ஓசை “ஆயிரத்தில் ஒருவன் 2 “ எடுக்க வேண்டும் என்பதுதான். சோழன் பயணம் தொடர வேண்டும் என்பது என்னுள் புதைந்து கிடக்கும் நீண்ட நாள் தாகம்,” எனக் கூறியிருக்கிறார்.
ஆயிரத்தில் ஒருவன் பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் வித்தியாசமான முயற்சி என பலராலும் பாராட்டப்பட்ட ஒரு படம்.