'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி மற்றும் பலர் நடித்து தீபாவளிக்கு வெளிவந்த 'சர்கார்' படம் 250 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாக சிலர் தகவலைப் பரப்பி வருகிறார்கள். அது உலகம் முழுவதும் வசூலித்த தொகையாம்.
உண்மையில் படம் 150 கோடி வசூலைத் தொட்டிருக்குமா என்பதே சந்தேகம்தான் என்றும் கோலிவுட்டில் சொல்கிறார்கள். இப்படம் தமிழ் நாட்டில் சில ஏரியாக்களில் மட்டும் நல்ல வசூலைக் கொடுத்துள்ளதாம். சில ஏரியாக்களில் பத்து சதவீதம் வரை நஷ்டம் வரும் என்கிறார்கள்.
இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமை சுமார் 80 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது என்று ஒரு தகவல். இதுவரை பங்குத் தொகையாக 70 கோடி மட்டுமே கிடைத்துள்ளதாம். இன்றும் நாளையும் மட்டும்தான் இப்படத்தின் கடைசி முக்கிய வசூல். அதன்பின் படம் வசூல் செய்ய வாய்ப்பில்லை என்கிறார்கள்.
நவம்பர் 29ம் தேதியன்று சர்கார் ஓடிய பல தியேட்டர்களில் '2.0' படத்தைத் திரையிட உள்ளார்கள். அதனால், அதற்கு மேல் வசூல் இருக்க வாய்ப்பில்லை.