ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
சுந்தர்.சி இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் வந்தா ராஜாவாதான் வருவேன். பொங்கலுக்கு திரைக்கு வருவதாக கூறுகிறார்கள். இந்த நிலையில், அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம் வெளியான நேரத்தில் தனக்கு ஏற்பட்ட ரூ. 18 கோடி நஷ்டத்தை சிம்பு தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தில் கோரிக்கை வைத்திருந்தார் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன்.
அந்த விவகாரம் தற்போது மீண்டும் தலைதூக்கியிருப்பதாகவும், அதனால் சிம்புவின் வந்தா ராஜாவாதான் வருவேன் படம் வெளியாகும்போது அவருக்கு ரெட்கார்டு போடப்படும் என்றும் செய்திகள் வெளியாகின.
இந்த பரபரப்பான சூழ்நிலையில், விரைவில் வெளியாகயிருக்கும் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் சிங்கிள் டிராக் வெளியாக இருக்கிறது. இந்தப்பாடலின் வரிகள், "எனக்கா ரெட்கார்டு, எடுத்துப்பாரு என் ரெக்கார்டு" என்று ஆரம்பிக்கிறதாம். இதை இணைய பக்கத்தில் தெரிவித்துள்ள சிம்பு, பாடலை நான் எழுதவில்லை என்றும் குறிப்பிட்டிருப்பவர், இந்தப்படம் ரசிகர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.