மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் |
சமீபகாலமாக பரபரப்பு கிளப்பி வரும் மீ டூ பற்றி கடந்த சில தினங்களுக்கு முன்பு கருத்து தெரிவித்த மோகன்லால் "மீ டூ இப்போது பேஷனாகி விட்டது. முதலில் கொஞ்சம் பரபரப்பு கிளப்பி விட்டு பின்பு காணாமல் போகும்" என்று குறிப்பிட்டார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதுகுறித்து நடிகை ரேவதி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
உணர்வுகளோடு பேசுவது பற்றி சிலருக்கு எப்படி பாடம் நடத்துவது? பிரபலமான நடிகர் ஒருவர் மீ டூ என்பது ட்ரெண்ட் என்று சொல்லி இருக்கிறார். இயக்குனர் அஞ்சலி மேனன் சொன்னதுபோல் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் இருந்து வந்தவர்களுக்கு பாலியல் கொடுமைகள் பற்றியும் அதை வெளியில் சொல்வதால் ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் தெரியாது. இவ்வாறு ரேவதி குறிப்பிட்டிருக்கிறார்.
இதுபோன்று பல நடிகைகள் மோகன்லாலின் கருத்துக்கு அவர் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.