டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
பாலிவுட் மட்டுமல்லாமல், தென்னிந்திய திரையுலகையும் அதிரவைத்த மீ டூ விவகாரம், மற்ற பூதாகரமான பிரச்சனைகளால் சமீப நாட்களாக கொஞ்சம் கொஞ்சமாக வலுவிழந்து வருவது போலத்தான் தெரிகிறது. இதைத்தான் சமீபத்தில் நடிகர் மோகன்லால் குறிப்பிட்டு பேசும்போது, மீ டூ விவகாரம் போகப்போக தேய்ந்து, கொஞ்ச நாட்களில் அழிந்தே போய்விடும்” என கூறினார்,
இதற்கு பெண்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியதுடன், திரையுலகில் இருந்தும் எதிர் கருத்துக்கள் வெளிவர ஆரம்பித்துள்ளன. சமீபத்தில் மோகன்லாலின் இந்த கருத்தை நடிகை ரேவதி விமர்சித்திருந்த நிலையில் தற்போது, மோகன்லாலுடன் சில படங்களில் ஜோடியாக நடித்த நடிகை பத்மபிரியாவும் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
இதுபற்றி கூறியுள்ள அவர், “இது பெண்களுக்கு எதிரான மோகன்லாலின் மந்தமான அணுகுமுறையைத்தான் காட்டுகிறது. அவர் சொல்வது போல 'மீ டூ'வுக்கு அழிவென்பது கிடையாது. பெண்களுக்காக குரல் கொடுக்க வாயை திறக்காவிட்டாலும் பரவாயில்லை. இதுபோன்ற கருத்துக்களை கூறாமலாவது இருக்கலாமே” என பதிலடி கொடுத்துள்ளார்.