நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' | மகள் திருமணத்தில் பிசியான ஷங்கர் | மீண்டும் வெளியாகிறது 'அஞ்சான்' |
ஒருகாலத்தில் நடிகை பார்வதியை தேடி நிறைய பட வாய்ப்புகள் வந்தன.. ஆனால் தற்போதோ ஒன்றிரண்டு படங்களை தவிர வேறு படங்கள் எதுவும் அவர் கைவசம் இல்லை, இத்தனைக்கும் அவர் மார்க்கெட்டும் குறையவில்லை, ஆனால் படங்களில் நடிப்பதை விட சமூக வலைதளங்கள் மூலம் பிரபலங்களின் மீது காட்டமான கருத்துக்களை கூறி ஏதாவது சர்ச்சைகளை கொண்டுவந்து விடுகிறார் என்பதாலேயே அவரை மலையாள திரையுலகம் ஒதுக்கி வைத்துள்ளது,
இது ஒருபக்கம் இருக்க, மம்முட்டியின் கசபா படத்தின் மீதான விமர்சனம், திலீப் விவகாரத்தில் மோகன்லால் மீது குற்றச்சாட்டு, சபரிமலை தீர்ப்பை வரவேற்று அறிக்கை என அவரது செயல்கள் எல்லாவற்றுக்கும் அவரது சமூக வலைதள பக்கத்தில் கண்டனங்களையும் ஆபாசமான திட்டுக்களையும் வாங்கி அவரால் சமாளிக்க முடியவில்லை.
இதனால் சமூக வலைதளத்தில் இருந்து தற்காலிகமாக விலகியுள்ள பார்வதி, சமீப நாட்களாக எந்த பதிவும் இடாமல், கருத்தும் சொல்லாமல் அமைதி காத்து வருகிறார்.