டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
தயாரிப்பாளர் சங்கத்தில், புதிய திரைப்படங்களை வெளியிடுவதற்கு திரைப்பட வெளியீட்டு ஒழுங்குபடுத்தும் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அவர்கள் ஒதுக்கித் தரும் தேதிகளில் தான் உறுப்பினர்கள் படங்களை வெளியிட வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆனால், அந்தக் குழுவின் அனுமதி இல்லாமலேயே சிலர் படங்களை வெளியிட்டு வந்தனர். விஜய் ஆண்டனி தயாரித்து, நடித்த 'திமிரு புடிச்சவன்' படம் அந்தக் குழுவின் அனுமதி பெறாமல் வெளிவந்தது. அந்தப்படம் அன்றைய தேதியில் வெளிவந்ததை எதிர்த்து, அதேதினத்தில் தனது 'உத்தரவு மகாராஜா' படத்தை வெளியிட்ட தயாரிப்பாளரும், நடிகருமான உதயா தயாரிப்பாளர் சங்க செயற் குழு உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார்.
நேற்று தயாரிப்பாளர் சங்கத்தில் சிறப்பு கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் திரைப்பட வெளியீட்டு ஒழுங்குப்படுத்தும் குழுவின் அனுமதி பெறாமல் படங்களை வெளியிடும் தயாரிப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியாக அறிவிக்கப்பட்டதாம்.
அதனடிப்படையில் கடந்த வாரம் அனுமதி பெறாமல் படத்தை வெளியிட்ட விஜய் ஆண்டனி மீது 'ரெட்' தடை விதிக்க தயாரிப்பாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.