ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
சண்டக்கோழி 2 படத்தை தொடர்ந்து விஷால் நடிப்பில் உருவாகி வரும் படம் அயோக்யா. வெங்கட் மோகன் என்ற புதியவர் இயக்க ராஷி கண்ணா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் பார்த்திபன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கியமான ரோலில் நடிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வௌியானது. விஷால் போலீஸ் வாகனத்தில் கையில் மதுபாட்டில் உடன் போஸ் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனங்கள் எழுந்தன. பா.ம.க., நிறுவனம் ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் இந்த போஸ்டரை திரும்ப பெற வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் இது குறித்து விஷால் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது : பீர் பாட்டிலை நான் கையில் தான் வைத்துள்ளேன், குடிக்கவில்லை. படத்தில் போலீஸாக நடிக்கிறேன். ஒரு குற்றத்தை துப்பறியும் போது பாட்டில் தடயமாக கிடைக்கிறது. அதை வைத்து சண்டையிடும் காட்சிகள் உள்ளன. அதைத்தான் அந்த போஸ்டரில் சொல்லியிருக்கிறோம் என கூறியுள்ளார்.