‛ஜெயிலர் 2' பற்றி வசந்த் ரவி பகிர்ந்த தகவல் | சர்வதேச விருது பட்டியலில் சண்டை இயக்குனர் அனல் அரசு | அமிதாப், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது | லிங்குசாமிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றாத கமல் | வீர தீர சூரன் - 'டிராப்' ஆன படத்தின் பெயரில் 'விக்ரம் 62' | 'புஷ்பா 2' - ஹிந்தி உரிமை இவ்வளவு விலையா? | ரூ.5 கோடி தாண்டாத தமிழ்ப் படங்கள் : ரூ.50 கோடியைக் கடந்த மலையாளப் படங்கள் | வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! |
மும்பை : மீ டூ புகாரில் சிக்கிய, பிரபல பாலிவுட் நடிகர் அலோக் நாத், 62, மீது, மஹாராஷ்டிர மாநில போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர். பிரபல பாலிவுட் நடிகர், அலோக் நாத் மீது, சமூக வலைதளமான, பேஸ்புக்கில், மீ டூ ஹேஷ்டேக்கில், எழுத்தாளரும், தயாரிப்பாளருமான, வின்டா நந்தா, பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினார்.
அதில், சில ஆண்டுகளுக்கு முன், ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற போது, எனக்கு வலுக்கட்டாயமாக மது கொடுத்து, அலோக் நாத் பாலியல் பலாத்காரம் செய்தார் என, அவர் குறிப்பிட்டிருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அலோக் நாத்தின் மனைவி, அஷு சிங், வின்டா நந்தா மீது, போலீசில் புகார் அளித்தார்.
நடிகர், அலோக் நாத் மீது, மேலும் இரண்டு பெண்கள் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை கூறினர். இதன்பின், சின்டா எனப்படும், சினிமா மற்றும், டிவி நடிகர்கள் சங்கம், அலோக் நாத்தை, சங்கத்தில் இருந்து நீக்கியது. இந்நிலையில் நேற்று, வின்டா நந்தா அளித்த புகாரின்படி, அலோக் நாத் மீது, மும்பை போலீசார் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.