டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
கடந்த மாதம் விஸ்வரூபம் எடுத்த மீ டூ விவகாரம், ஹிந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகங்களை மிரட்டியது போல, மலையாள திரையுலகில் பெரிய கொந்தளிப்பையோ, பாதிப்பையோ ஏற்படுத்தவில்லை. காரணம் அங்கே ஏற்கனவே நடிகை கடத்தல் சம்பவம் திரையுலகில் பிரதான இடத்தை பிடித்திருந்ததால், அதற்கான போராட்டம் தான் சினிமா பெண்கள் அமைப்பினரின் போராட்டமாக நடந்து வருகிறது.
இந்தநிலையில் துபாயில் நடைபெற்ற ஒரு விழாவில் கலந்துகொண்ட மோகன்லாலிடம் மீ டூ குறித்து கேட்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலளித்த மோகன்லால், “மீ டூவால் மலையாள சினிமாவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. அனேகமாக வெகு விரைவிலேயே இந்த மீ டூ விவகாரம் அழிந்துபோய்விடும். தவிர மீ டூ வால் எனக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பதால் அதை பற்றி பெரிதாக பேசுவதற்கு ஒன்றுமில்லை” என கூறினாராம்.
மீ டூ குறித்து கிண்டலாக கருத்து கூறியதால் மோகன்லாலுக்கு மீ டூ ஆதரவு பெண்கள் மற்றும் சமூக நல விரும்பிகள் மத்தியில் இருந்து கண்டனக்குரல்கள் பறக்கின்றன.