ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
மலையாள சினிமா கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் 5௦ கோடி, 100 கோடி கிளப் என்கிற பெயர்களையே கேட்டு வருகிறது. தனது த்ரிஷ்யம் படம் மூலம் மலையாள சினிமாவில் முதன்முதலாக 5௦ கோடி வசூல் கிளப்பை உருவாக்கினார் மோகன்லால். அதன்பின்னர் 'புலி முருகன்' மூலம் 100 கோடி வசூல் கிளப்பை உருவாக்கியதும் அவரே.
அதை தொடர்ந்து சில படங்கள் 5௦ கோடி கிளப்பில் எளிதாக நுழைந்தாலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே 100 கோடி வசூலை வேறெந்த படமும் தொடக்வில்லை. இந்நிலையில் கடந்த மாதம் நிவின்பாலி - மோகன்லால் நடிப்பில் வெளியான காயம்குளம் கொச்சுன்னி படம் 100 கோடி வசூல் கிளப்பில் நுழைந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பதினாறாம் நூற்றாண்டில் நிஜமாகவே வாழ்ந்த ஒரு காயம்குளம் கொச்சுன்னி என்கிற கொள்ளையனை பற்றி இயக்குனர் ரோஷன் ஆண்ட்ரூஸ் உருவாக்கிய இந்தப்படம் ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றது தான் இந்த சாதனைக்கு காரணம்.